tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிக்கு பதவி உயர்வா? தமிழக அரசு விளக்கம்

சென்னை,செப். 20-  தூத்துக்குடியில் மக்க ளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங் கேற்றவர்கள் மீது காவல்துறை யினர் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை கொன்றனர்.

இதில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு உத்தரவிட்ட தாக குற்றம்சாட்டப்பட்ட துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது என்று செய்தி  வெளியானது. இந்த பதவி உயர்வுக்கு  பலரும் கண்ட னங்களை தெரிவித்தனர்.  இந்நிலையில் இதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் இளம்பகவத் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணி யாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த  ஆகஸ்ட் 6அன்று வட்டாட்சி யராகப் பதவி உயர்வு அளிக்கப்  பட்டது.

இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ரான போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தர விட்டதாக குற்றம் சாட்டப் பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளி யிடப்பட்டுள்ளது.

இது முற்றி லும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணை யத்தின் அறிக்கையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய் துறை  அலுவலராக குற்றம்சாட்டப் பட்டுள்ள மு.கண்ணன் என்பவ ருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சி யராகப் பணிபுரிந்த து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.  

பதவி உயர்வு அளிக்கப் பட்ட கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற் கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர் குழப்பம் கார ணமாக செய்தி ஊடகங்கள் தவ றான தகவலை வெளி யிட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.