tamilnadu

img

பேராசிரியர் சி.டி. குரியன் மறைவு உழைப்பாளி மக்களுக்கு பேரிழப்பு!

சென்னை, ஜூலை 24 - பேராசிரியர் சி.டி. குரியன் மறைவு, பொருளியல் துறைக் கும், கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும், ஆராய்ச்சி மாண வர்களுக்கும் பேரிழப்பாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப் பிட்டிருப்பதாவது:

பொருளியல் ஆய்வுகளில் மிகப் பெரிய பங்களிப்பை செய்துள்ள பொரு ளாதார அறிஞர் பேராசிரியர் சி.டி. குரியன் (92) செவ்வாயன்று (23.07.2024) கொச்சி அருகே கோலன்சேரியில் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. 

அவரது மறைவிற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

பேராசிரியர் சி.டி.குரியன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் விரிவுரையாள ராக பணிபுரிந்தவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்.ஐ.டி.எஸ்) இயக்குநராக பல ஆண்டு காலம் பணியாற்றியவர். சென்னை, எம்.ஐ.டி.எஸ் வளர்ச்சிக்காக தனது தொடர் பங்களிப்பை செலுத்தி, இந்தியாவில் தேசிய அளவிலான மிகச்சிறந்த சமூக அறிவியல் நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளதற்கு இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. 

இவருடைய ஆய்வுகளில் சமூகத்தில் நிலவும் பொருளாதார  ஏற்றத்தாழ்வு  குறித்த பிரச்சனைகளுக்கும், அனைவரையும் உள்ளடக் கிய பொருளியல் மேம்  பாட்டை உருவாக்குவ திலேயே முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தி யவர். ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியவர். குறிப்பாக, தமிழக கிராமப்புற  மாறுதல்கள் என்ற அவ ருடைய ஆய்வுதமிழகத்தில் முக்கிய பங்களிப்பை செய்தது.

இவருடைய ஆய்வு மாணவர்களான வி.கே. ராமச்சந்திரன், ஜெ. ஜெயரஞ் சன் ஆகியோர் தமிழகம், கேரள மாநி லங்களில் திட்டமிடும் குழுக்களில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் என்பது பெருமைக்குரியது. 

இடதுசாரி சிந்தனைகள் மீது  ஆழ்ந்த பற்றுடையவர். 60 ஆண்டு களுக்கும் மேலாக கல்விப் பணியிலும், ஆய்வுப் பணியிலும் தனி முத்திரை பதித்தவர். அவரது மறைவு பொருளியல் துறைக்கும், கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும், ஆராய்ச்சி மாணவர் களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற் குழு தனது ஆறுதலையும், அனுதாபங் களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.