tamilnadu

அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க செயலி

சென்னை, ஜூன் 14- பள்ளி - கல்வி ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களை பெறுவதற்கான புதிய மின்னணு செயலி உருவாக்கப் பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித் துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவை களுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர். அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர் களுக்கு சிரமங்களும் கால விரை யமும் ஏற்படுகிறது. எனவே இவ்வாரான சிரமங்கள் மற்றும் கால விரையத்தினை தவிர்க்கும் பொருட்டு 25.5.2022 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் ஆசிரியர்கள் அவர்தம் கைபேசி வாயி லாக தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனு மதி மற்றும் பிற பணி சார்ந்த தேவை களுக்கு விண்ணப்பிக்கும் செயலி TNSED-SCHOOLS (இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான செயலி) ஒன்று உருவாக்கப்பட்டு பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

;