சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் உள்ள 3 துணை மின் நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு கொடுக்கப்படவுள்ள சம்பவம், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்தால், புதிதாக நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிப்பு மற்றும் இயக்கப் பணிகளை மேற்கொள்ள முதல்முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே பணியில் உள்ள பொறியாளர்களுக்குப் பதவி உயர்வு பறிக்கப்படுவதுடன், பொறியியல் படிப்பை படித்து முடித்து வேலை கிடைக்கும் என நம்பியிருக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப் பும் பறிக்கபோகும் நிலை உருவாகியுள்ளது.தனியார் நிறுவனம் பராமரித்தாலும், புதிதாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என காரணங்கள் கூறலாம். அரசு நிறுவனத்தில் பணி புரிவதில் உள்ள பலன்கள் முழுமையாக “காண்ட்ராக்ட்” எடுக்கும் நிறுவனத்தால் அளிக்கப்படுமா? என்பது என்றும் கேள்விக்குறி தான். இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதிதாக அமைக்கப்பட்ட 3 துணை மின் நிலையங்களை தனியார் நிறுவனங்களின் மூலம் பராமரிக்க வாரியத் தலைவரின் உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொண் டுள்ளது.
கடந்த 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம், அனல், நீர், காற்று ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் மூலமும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.மின்சார உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படும் மின்சாரம் துணை மின் நிலையங்களுக்கு மின் கடத்திகள் மூலம் கொண்டு வரப்படும். பின்னர் அங்கிருந்து மின் மாற்றி
கள் மூலம் கட்டுப்பாட்டுடன் தொழிற்சாலைகள், விவசாய நிறுவனங்கள், வீடுகள் உள் ளிட்டவைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.மின் விநியோகத்தில் துணை மின் நிலையங்களின் பங்கு மிக முக்கியமானது. தமிழ் நாட்டில் சுமார் ஆயிரத்து 650 துணை மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை மின் நிலையங்களில் சிறிது பழுது ஏற்பட்டாலும் மின் வினியோகம் செய்வதில் பெரும் பாதிப்பு ஏற்படும்.