சென்னை, ஆக. 31 - பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகள் வீடு கட்ட ஒன்றிய அரசு சார்பில் 1.11 லட்சம் மாநில அரசு சார்பில் 1.72 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டு களாக இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. தற்போது, 2028-29 ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ கத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஊராட்சி செயலாளர்கள் இந்த பணியை தகுதி அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போனில் பயனாளிகளை புகைப்படம் எடுத்து அவரைப் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும்.
3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வைத்தி ருப்போர், வேளாண் எந்திரங்களை வைத்தி ருப்பவர்கள், அரசு பணியில் இருப்பவர் கள், மாதம் ரூ. 15 ஆயிரத்துக்கும் மேல் சம்ப ளம் வாங்குபவர்கள் ஆகியோரை பய னாளிகளாக சேர்க்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசன நிலம் 2.5 ஏக்கர் இருந்தால், பாசன வசதி இல்லாத நிலம் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் இருந்தால் அவர்களையும் பயனாளிகளாக சேர்க்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு முடிந்ததும் மாவட்ட வாரியாக வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.