tamilnadu

img

பொதுத்தேர்வுக்காக தயார்: பள்ளிக் கல்வித்துறை

சென்னை:
தமிழ்நாட்டின் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ள பள்ளிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.சென்னையில் கொரோனா தனிமைப் படுத்தப்பட்ட முகாம்களாக மாற்றப்பட்டபள்ளிகளை, பொதுத் தேர்வு எழுதும் மையங்களாக மாற்றியமைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்காக முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களுக்கும் 60 ஆயிரம் முகக்கவசங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், மேலும் 60 ஆயிரம் முகக்கவசங்களை அனுப்ப உள்ளதாகவும் கூறிய பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

;