சென்னை,ஆக.30-
ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை யை ஏற்க மறுத்து, தமிழ கத்திற்கென பிரத்யேகமாக மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறி வித்தார்.
ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஓராண்டுக் கும் மேலாக இப்பணியில் ஈடுபட்டு, அறிக்கையை தயாரித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெறுவதற்கான பிரத்யேக கூட்டம் புதனன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பி னர்கள் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். வரக்கூடிய நாட்களில் இந்த அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்க கூடிய பணி கள் நடைபெறும் என குழு வட்டாரங்கள் தெரிவித்துள் ளன. இந்த பணிகளை முடித்து செப்டம்பர் 4 ஆவது வாரத்தில் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.