செசபிள் மாஸ்டர்ஸ் 2022 ஆன்லைன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் பிரக்ஞானந்தா.
செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
திங்கட்கிழமை நடைபெற்ற காலிறுதியில் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய்யியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
16 வயதான பிரக்ஞானந்தா அரையிறுதியில் அனிஷ் கிரியை (நெதர்லாந்து) எதிர்கொள்கிறார்.