tamilnadu

வடசென்னையில் இன்று மின்தடை

சென்னை, ஜூலை 3- வடசென்னையில் வியாழக்கிழமை (ஜூலை 4) வியாசர்பாடி, செங்குன்றம், அம்பத்தூர், ஆவடி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறி வித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரி யம் வெளியிட்டுள்ள அறிக் கையில், சென்னையில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் வியாசர்பாடி கே.கே.ஆர்.நகர், சி.எம்.ஆர்.எல். 2 (எம்.எம்.சி), கம்பர் நகர், மாதவரம் லெதர்ஸ் எஸ்டேட், சைதன்யா பள்ளி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

செங்குன்றம் டிஎச் சாலை, காந்தி நகர், திலகர் தெரு, ஏழுமலை நாயக்கர் தெரு, ஆசைத்தம்பி தெரு, எம்ஜிஆர் நகர், முத்து மாரியம்மன் தெரு  ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அம்பத்தூர் மாதனாங் குப்பம், நேதாஜி நகர், புத்தகரம், சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகர், ஜெய பார்வதி நகர், செந்தில் நகர், புழல், ஜேபி நகர், காவேரி நகர், சூசை நகர் உள்ளிட்ட பல பகுதிக ளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;