tamilnadu

வறுமையால் பரிதாபம்: புதுமணத் தம்பதி தற்கொலை

சென்னை, மே 30- ஊரடங்கால் வாழ்வாதாரம் இல்லாமல்  அவதிபட்டுவந்த புதுமணத் தம்பதி ஒரே  புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில்  வடமாநில தொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கு  அதிகமானவர்கள் வேலை செய்து வரு கின்றனர். இவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்க்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மேற்கு  வங்கத்திலிருந்து வந்த இளம் தம்பதியினர் தாம்பரம், அடுத்த சேலையூர் மப்பேடு பகுதி யில் வாடகை வீட்டில் குடியேறினர். குடி யேறிய மறுநாளே கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்து  பிழைத்து வந்த நிலையில் அவருடைய நண்பர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டில்  தனிமையாக இருந்த இருவரும் வேலை வாய்ப்பு இல்லாமல் கடுமையாக கஷ்டப் பட்டு வந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (மே 29)  காலையில் வீட்டிற்கு முன் நடமாடிய அவர்கள் பின்னர், வீட்டிற்கு சென்று கதவை பூட்டிக் கொண்டனர். அதன்பிறகு அவர்கள் வெளி யில் வரவில்லை. இந்நிலையில் சனிக்கிழ மையன்று (மே 30) கலை வீட்டிலிருந்து துர்நாற்  றம் வந்துள்ளது. அப்போது அக்கம்பக்கத்தி னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது இளம்  தம்பதியினர் ஒரே புடவையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் சேலையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த  தம்பதிகள் பெயர் விபரங்கள் தெரியாததால் அந்த பகுதியில் இருக்கும் மேற்குவங்க தொழிலாளர்களிடம் சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இளந்தம்பதிகளின் மரணம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.