tamilnadu

img

மோடிக்கு எதிராக அரசியல் காற்று வீசத் தொடங்கிவிட்டது: கே.எஸ்‌.அழகிரி....

சென்னை:
பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் காற்று வீசத் தொடங்கிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவல் குறித்து பிரதமர் மோடி வாரனாசியில் பேசும் போது, பாரதப் போர் 14 நாள்களில் முடிந்தது. ஆனால் கொரோனா ஒழிப்பு போர் 21 நாள்களில் முடியும் என்று பகிரங்கமாக கூறினார். ஆனால், மாதங் கள் உருண்டோடியதே தவிர, கொரோனா ஒழிப்பு போர் கடும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதற்கு பிரதமர் மோடி அரசின் தவறான அணுகுமுறை தான் காரணம். இதன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்து வேலையில்லா திண்டாட்டம் பெருகி, வாழ்வாதாரத்திற்காக மக்கள் தவித்து வருகிறார்கள்.

இதையெல்லாம் மூடி மறைக்கிற வகையில், கொரோனா உயிரிழப்புகளைக் குறைத்ததின் மூலம் இந்தியா சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.கடுமையான நிதி பற்றாக் குறையில் சிக்கியிருக்கிற மத்திய பாஜக அரசு அத்தகைய முதலீடுகளை செய்வதற்கு எத்தகைய நிதி ஆதாரங்களும் இல்லை. கடுமையான ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக மிக குறைவாக 24 சதவிகிதம் சுருங்கியிருக்கிறது. அனைத்துத் துறைகளும் வளர்ச்சியில் பின் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.இந்நிலையில், இந்திய மக்களை வறுமையின் பிடியிலிருந்து குறைந்த பட்சம் மீட்க முடியாத நிலையில் மோடியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு எதிராக மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போகிறார்கள். அதே போல, 2024-ல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்ட
மாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற நிதீஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக் கப்பட்டு வருகிறது.நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் காற்று வீச ஆரம்பித்து விட்டது. பீகார் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையில் ஈடுபாடுள்ள கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுகிற வகையில் தேர்தல் முடிவுகள் வெளிவரப் போகின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.