tamilnadu

img

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6-ஆம் தேதி ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த ஏப்ரல்  6 அன்று சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில்,  சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள்  ஆகிய 3 பேர், உரிய ஆவணங்களின்றி 4 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்டனர். இதையடுத்து அந்த நபர்களை கைது செய்த காவல்துறையினர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான ‘ப்ளூ டைமண்ட்’ என்ற நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணத்தை தேர்தல் செலவுக்காக நயினார் நாகேந்திரன் எடுத்து வரச் சொன்னதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பணத்தை எடுத்து வந்த தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகியோர் கைது. 7 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை மற்றும் பா.ஜ.க உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

;