tamilnadu

img

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைக்கு அனுமதி கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப். 2 - “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது” என்று காவல்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்த ரவு பிறப்பித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னி ட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கு மாறு, காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஆர்.கே. சுரேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசார ணை, திங்களன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் யு.உதயகுமார், “பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட  3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்ப தால் அங்கு அனுமதி மறுக்கப் பட்டது” என்று விளக்கம்அளித்தார்.

மேலும் “வேறு இடத்தில் சிலை  வைக்க அனுமதி கேட்டால் மனு  பரிசீலிக்கப்படும்” எனவும் தமிழ அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், “பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி இல்லை” என்றும் “சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மக்கும் நிலையில் உள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்” என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக “ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது” என்றும் அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. 

அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, “பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது” என்றும் “மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்” எனவும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.