மின் கட்டண கொள்ளையை கண்டித்து முதலமைச்சருக்கு மனு கொடுக்கும் இயக்கத்தை ஜூன் 26 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்தியசென்னை மாவட்டம், ஆயிரம் விளக்கு பகுதிக்குழு சார்பில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை மத்தியசென்னை மேற்பார்வை பொறியாளரிடம் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், வெ.தனலஷ்மி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தயாளன், மின்னரங்க மத்திய சென்னை கிளை செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் வழங்கினர்.