சிபிஎம் மாநாட்டிற்கு தாராளமாக நிதி வழங்கிய திருவள்ளூர் மக்கள்
எழுத்தாளர் ரமணன் மொழிபெயர்த்த “சரித்திரத்தின் சக்கரங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் எஸ்ஆர்பி டுல்ஸ் அருகில் சனிக்கிழமையன்று (மார்ச் 22) நடைபெற்றது. தமுஎகச பெருங்குடி கிளையின் தலைவர் உதய குமார் தலைமையில் பொரு ளாளர் சக்தி வரவேற்று பேசி னார். கவிஞர் பெர்டோலெட் பிரக்ட்டின் எழுதிய ஆங்கில மொழி கவிதை களை தமிழில் “சரித்தி ரத்தின் சக்கரங்கள்” என்ற பெயரில் நாடக இயக்குநர் பிரளயன் நூலை வெளியிட மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு பெற்றுக் கொண்டார். நூல் குறித்து தென் சென்னை மாவட்டச் செயலாளர் அசோக் சிங், நதிரா பானு ஆகியோர் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க நிர்வாகிகள் சுந்தர், தேவபிரகாஷ், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலாசிரியர் ரமணன் ஏற்புரையாற்றினார்.