tamilnadu

img

மக்கள் ஒற்றுமை கலைவிழா

மக்கள் ஒற்றுமை கலைவிழா

திருவள்ளூர், மே 12- டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருத்தணியை  அடுத்த கே.ஜி.கண்டிகையில்   சனிக்கிழமை இரவு மக்கள் ஒற்றுமை கலை விழா நடைபெற்றது.  இதற்கு தமுஎகச மாவட்ட பொருளாளர் ஜே.தேசன் தலைமையில்மாவட்ட துணைத்தலைவர் கி.எழில் வரவேற்றார். மாநில துணை பொதுச் செய லாளர் களப்பிரன்,  ாற்று ஊடக மைய இயக்குநர்  பேராசிரியர் இரா காளீஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் ஞான.பிரசன்னா, தமுஎகச  மாவட்டச் செயலாளர் கி.பாரி, மாவட்ட துணைச் செயலாளர் வி.அந்தோணி, சிஐடியு மாவட்ட நிர்வாகி கே.ஜி.கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில அளவில் கலைத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கபட்டது. தெரு கூத்து மூத்த கலை ஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. விழாவில் கிராமிய கலைகள், பாடல், தெரு கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. சின்ன பையன் நன்றி கூறினார்.