புதிய மென்பொருள் தயாராகும் வரை பழைய மென்பொருளில் சம்பளப் பட்டியல் தயாரிக்க அனுமதிக்க கோரி செவ்வாயன்று (ஜூன் 25)
சைதாப்பேட்டையில் உள்ள சம்பள கணக்கு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் சா.டேனியல் ஜெயசிங் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம். வெங்கடேசன். துணைத் தலைவர்கள் சுமதி, நா.வினோத் குமார் உள்ளிட்டோர் பேசினர்.