கடலூர், ஜூன் 26- முந்திரி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தக் பட்ச கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முந்திரி தொழிலாளர் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட முந்திரி தொழிலாளர் சங்கத்தின் பேரவைக் கூட்டம் பண்ருட்டியில் மாவட்ட துணைத் தலைவர் கே.சாவித்திரி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ். திருஅரசு, வி.திருமுருகன், மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.உத்திராபதி, மாவட்ட நிர்வாகிகள் பி.கணேசன், ஏ.நடராஜன், பொன்னம்பலம், அருள்மொழி, டி.ராஜேந்தி ரன், ஆர்.தனபால், குமரகுரு, நாட்டாமை ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி னர். முந்திரி ஆலையில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு பி.எப், இஎஸ்ஐ, போனஸ் உள்ளிட்ட சட்ட சலுகைகளை அமலாக்க வேண்டும். முந்திரி கொட்டை உடைக்கும் எந்திரம் வாங்க மானியத் துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். முந்திரி தொழிலாளர்க ளுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 22 பேர் கொண்ட மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழு தேர்வு செய்யப்பட்டது. மூன்று மாதத்திற்குள் முந்திரி தொழிலாளர்களின் மாநில மாநாட்டை கடலூரில் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.