tamilnadu

ஜூலை 31 வரை பட்டா மனுக்களை பதிவேற்றம் செய்யலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 25- பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவை களுக்கான மனுக்களை ஜூலை 31ந் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர்  ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 6 வட்டங்களுக்கு மட்டும்  1429ம் பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு சோழிங்கநல்லூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராலும், மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராலும், திரு வொற்றியூர், அம்பத்தூர், ஆலந்தூர் மற்றும்  மாதவரம் ஆகிய வட்டங்களில் சம்மந்தப் பட்ட வருவாய் கோட்ட அலுவலர்களாலும் 29.06.2020 முதல் தொடங்கி 30.06.2020 வரை  நடத்தப்பட்டது. கோவிட் -19 ஊரடங்கு காரணமாக பட்டா  மாறுதல் மற்றும் பொது மக்களின் இதர கோரிக்கைகள் சம்மந்தமான மனுக்களை கண்டிப்பாக நேரடியாக வழங்குவதை தவிர்த்து URL htÉs:~~gÅ.tn.gHv.in~Jamaoabdhi என்ற இணையத்தின் மூல மாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ 29.06.2020 முதல் 15.07.2020  வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கடைசி தேதி 31.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் சம்மந்தமான மனுக்  களை 31.07.2020 வரை பதிவேற்றம் செய்து  கொள்ளலாம்  தெரிவித்து கொள்ளப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.