சென்னை, ஜூன் 20- சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனை, தாய்-சேய் நல மருத்துவமனை உள்பட 15-க்கும் மேற்பட்ட மருத்துவ மனைகள் உள்ளன. இந்த மருத்துவமனை களில் 10 ஆயிரம் பேர் வரையில் உள் நோயாளிக ளாக சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.புறநோயாளி களாகவும் பலர் மருத்துவ மனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், நோயா ளிகள் என ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் வரையில் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை களில் குடிநீர் தேவை தினமும் 1 கோடி லிட்டராக உள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் இது வெகுவாக குறைக்க ப்பட்டுள்ளது. தற்போது 60 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகளும், அவர்கள் உறவினர்களும் பாதிப்புக்குள்ளா கியுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டால் அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிவறைகளில் ஒரு சில கழிவறைகளை தவிர மற்ற கழிவறைகள் மூடப்பட்டுள்ளன. இந்த கழிவறைகளிலும் தண்ணீர் குறைவாகவே வருவதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் வராததால் நோயாளிகள் வெளியில் சென்று பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். இதனால் தண்ணீரை விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் மருத்துவமனை அருகில் அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரின் விலையும் 2 மடங்கு உயர்ந்துள்ளது. இதுபற்றி நோயாளிகள் கூறும்போது, தண்ணீர் தட்டுப்பாட்டால் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. இதில் அரசு கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.