சென்னை, மே 8- சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்பட் டதால் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி மின்சார ரயில் புதன்கிழமை காலை வந்து கொண்டி ருந்தது. கொருக்குப்பேட்டை ரயில் நிலை யம் வரும்போது சிக்னல் பிரச்சனை காரண மாக ரயில் வழியில் நிறுத்தப்பட்டது. வெகு நேரமாகியும் சிக்னல் சரியாகாததால் ரயிலில் வந்த பயணிகள் 200க்கும் மேற் பட்டோர் ரயிலை விட்டு இறங்கி தண்ட வாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர்.
இதனால் சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மார்க்கம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மின்சார ரயில் கூட்ஸ் ரயில் அனைத்தும் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது இதை யடுத்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் கொருக்குப்பேட்டை, ஆர்.கே. நகர் ஆகிய காவல் நிலையங்களில் இருந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட ரயில் பயணி களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். ஆனால் ரயில் பயணிகள் இது போன்ற சம்பவம் அடிக்கடி நடைபெறு கிறது. அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதிகாரிகள் இதற்கு சரியான பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து கொருக்குப்பேட்டை ரயில்வே நிலைய அதிகாரி ஜெயக்குமார் சம்பவம் இடத்திற்கு வந்து ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் சிக்னல் பிரச்சனை இனி ஏற்படாதவாறு நடவடிக்கை மேற் கொள்கிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இரு மார்க்கத்திலும் ரயில்களை இயக்க முடியவில்லை.
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத் திலிருந்து சென்ட்ரல், சென்னை கடற்கரை ரயில் நிலையம், வியாசர்பாடி ரயில் நிலை யம் ஆகிய இடங்களுக்கு பிரிந்து செல்லக் கூடிய முனையமாக உள்ளது இதனால் சிக்னல் கோளாறு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.