tamilnadu

img

வெளி மாநில பதிவெண் ஆம்னி பேருந்து உரிமத்தை நீட்டிக்க வேண்டும்!

சென்னை, ஜூன் 17- வெளிமாநிலப் பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு மேலும்  3 மாதம் உரிமத்தை நீட்  டிக்குமாறு, போக்குவரத் துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக் கப்பட்டு வருகின்றன. இதில்,  வெளிமாநில பதிவு எண்  கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் அடங்கும். வெளிமாநில ஆம்னி பதிவு  எண் பேருந்துகள் தமிழ்நாட் டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வரு மானம் மற்றும் சாலை வரி யில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதற்கு பல்வேறு  வழிமுறைகள் விதிக்கப் பட்டிருந்தது.

அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலை யில் வெளி மாநில பதிவு எண்  கொண்ட ஆம்னி பேருந்து கள் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது என கடந்த 12 ஆம் தேதி போக்குவரத்துத்  துறை அதிகாரிகள் தெரிவித்  திருந்தனர்.  இந்நிலையில், தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்துத் துறை அதி காரிகளிடம் கால அவகா சம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, தமிழ்  நாட்டில் ஆம்னி பேருந்து கள் இயங்க இன்று வரை  கால அவகாசம் விடுக்கப் பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து களை இயக்குவதற்கான காலக்கெடு செவ்வாய்க் கிழமை (ஜூன் 18) காலை யுடன் முடிவடைகிறது.  

இந்நிலையில், போக்கு வரத்துத்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து ஆணையரை பிற்பகல் சந்திக்க ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்  முடிவு செய்துள்ளனர். வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட்டை மேலும் 3 மாதம் நீட்டிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்க ஆம்னி  உரிமையாளர்கள் திட்டமிட் டுள்ளனர். தமிழ்நாடு பதி வெண்ணுக்கு மாறும் வகை யில் 3 மாதம் பர்மிட்டை நீட் டித்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.