சென்னை,ஆக,16- சென்னையில் வட கிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாநக ராட்சி, குடிநீர் வாரியம், நெடு ஞ்சாலை, மின்வாரிய அதி காரிகள் பங்கேற்றுள்ளனர். 7 அமைச்சர்களும் வரிசை யாக அமர்ந்து அதிகாரி களிடம் சரமாரியாக கேள்வி களை கேட்டனர். அப்போது, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், மழைநீர் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்,” மழை நீர் வடிகால்களை தூர் வாறும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணி களை அடுத்த 30 நாட்களுக் குள் முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்யாமல், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து செல்ல கூறியுள் ளோம். மழைக்காலம் முடி யும் வரை, அதிகாரிகளை மாற்றக்கூடாது என அறி வுறுத்தியுள்ளோம்” என்றார்.