சென்னை,செப்.17- தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கில் கரும்பு விவ சாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை கள் ரூ.100 கோடி தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செய லாளர் டி.ரவீந்திரன், மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கரும்பு கட்டுப்பாடு சட்டம்- 1966, பிரிவு 5 ஏ-இன் படி சர்க்கரை ஆலை களுக்கு வரும் லாபத்தில் ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு 50 சதவீதத்தை சர்க்கரை ஆலைகள் தர வேண்டும்.
கூட்டுறவு ஆலைகள் பணத்தை கொடுத்த நிலையில் தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு பணத்தை தரவில்லை.
விவசாயிகளுக்கு தர வேண்டிய லாப பங்குத் தொகையை தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத் தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கில் 5 ஏ லாபப்பங்கு தொகையை தனியார் ஆலைகள் 2004/05, 2008/09 ஆண்டு களுக்கு வழங்கிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இதன் தொடர்ச்சியாக மாநில சர்க்கரை துறை ஆணையம் ஒவ் வொரு ஆலைக்கும் தனித்தனியாக உத்தரவை பிறப்பித்துள்ளன.
இதன்படி 13 தனியார் சர்க்கரை ஆலைகள் நூறு கோடி ரூபாயை கரும்பு விவசாயிகளுக்கு உத்தரவு பெற்ற 14 நாட்களில் தர வேண்டும்.
தொடர் போராட்டம்
கரும்பு கட்டுப்பாடு சட்டம் 5ஏ பிரிவை ஒன்றிய அரசு 2009 இல் ரத்து செய்து விட்டது. சட்டம் அமலில் இருந்த ஆண்டுகளில் கரும்பு அனுப்பிய விவ சாயிகளுக்கு லாபப்பங்கு பணத்தை மாநில அரசு பெற்றுத்தரக் கோரி தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலை மையில் சட்டமன்ற முற்றுகை உட்பட 26 போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த போராட்டங்களில் விவசாயி கள் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தற்போதைய மாநில பொதுச்செய லாளர் சாமி.நடராஜன் உள்பட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆயிரக் கணக்கான கரும்பு விவசாயிகள் போராட்டங்களில் பங்கேற்றனர். கரும்பு விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை பல பொய் வழக்குகளை போட்டது. இன்றும் வழக்குகள் உள்ளன.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒவ்வொரு ஆலைக்கும் தனித்தனியாக 27 வழக்குகள் தொடுக் கப்பட்டன. 5ஏ லாபப் பங்குத்தொகை சட்டம் அமலில் இருந்த காலத்தில் கொடுக்கத் தவறியது.
அந்தத் தொகையை விவசாயி களுக்கு வழங்கிட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு தனித்தனியாக தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பின்படி கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைகள் லாபப் பங்குத் தொகையை கணக்கிட்டு விவ சாயிகளுக்கு ரூ.98 கோடியை 2016இல் வழங்கிவிட்டனர்.
மேல் முறையீடுகள்
தென் இந்திய தனியார் சர்க்கரை ஆலைகள் சங்கம் சார்பில் (SISMA) தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் இணைந்து வழக்கு நடைபெற்றது. மேல் முறையீட்டிலும் உயர்நீதிமன்றம் விவ சாயிகளுக்கு லாபப்பங்கு பணத்தை வழங்கிட வேண்டுமென 2019 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தனியார் சர்க்கரை ஆலைகள் உயர்நீதிமன்ற பெஞ்சில் மேல்முறையீடு செய்தன. உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள், தனியார் சர்க் கரை ஆலைகள் லாபப்பங்கு தொகை யை தர வேண்டும் என 2024 இல் உத்தர விட்டது. தீர்ப்பின் அடிப்படையில். மாநில சர்க்கரை துறை ஆணையம் ஒவ் வொரு ஆலைக்கும் தனித்தனியாக கணக்கிட்டு உத்தரவை வழங்கி உள்ளது.
ஒரு லட்சம் விவசாய குடும்பங்களுக்கு...
இதன்படி சத்தியமங்கலம் பண் ணாரி ஆலை ரூ.14 கோடி, ராஜஸ்ரீ ஆலை கள் ரூ.14 கோடி, காட்டூர் கோத்தாரி ரூ.5 கோடி, பொன்னி ஆலை ரூ.4 கோடி, இஐடி பாரி ஆலைகள் சுமார் ரூ.25 கோடி மற்றும் தரணி, அம்பிகா, ஆரூ ரான் சர்க்கரை ஆலைகளும் லாபப் பங்கு பணத்தை தர வேண்டும் என ரூ.100 கோடிக்கும் அதிகமாக சுமார் ஒரு லட்சம் கரும்பு விவசாய குடும்பங் களுக்கு தனியார் சர்க்கரை ஆலை கள் வழங்க வேண்டும்.
பத்தாண்டு கால களப்போராட்டத் திலும், நீதிமன்ற போராட்டத்திலும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம்.
எஸ்ஏபி பாக்கி ரூ.1200 கோடியை பெற்றுத்தருக!
2013-17 ஆகிய நான்கு ஆண்டுகள் மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை (State Advised Price) கூட்டுறவு ஆலைகள் கொடுத்து விட்டன, 24 தனியார் சர்க்கரை ஆலை கள் தரவில்லை. முத்தரப்பு கூட்டம் நடத்தி விவசாயிகளுக்கு பெற்றுத்தர மாநில சர்க்கரை துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, முத்தரப்பு கூட்டம் நடந்தது. ஆனால் விவசாயிகளுக்கு பணம் வரவில்லை. விலையை அறிவித்த மாநில அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ரூ.1200 கோடி எஸ்ஏபி (SAP) பாக்கியை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தின் மாநிலக்குழு மாநில அரசை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.