தேர்வு குளறுபடி: விசாரணை குழு அமைக்க உத்தரவு
சென்னை,ஜன.13- தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய் புல்லா என்ப வரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசா ரணை சனிக்கிழமை (ஜன.13) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்க ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும். விசாரணைக் குழு பரிந்துரை களின் அடிப்படையில் உரிய நடவடிக் கைகளை எடுக்கவும் தேர்வாணை யத்துக்கு அறிவுறுத்தினர்.
மேலும், அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் தேர்வாணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
விலகி செல்கிறது வடகிழக்கு பருவமழை!
சென்னை,ஜன.13- வடகிழக்கு பருவமழை ஜனவரி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, பருவமழை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைய வுள்ளது.
வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி திங்கட் கிழமை (ஜன.15) தென்னிந்திய பகுதி களில் இருந்து வடகிழக்கு பருவ மழை விலகுவதற்கான சாதகமான சூழல் நிலவி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜன.14 முதல் வருகிற 19 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் தென் தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்ப தாகவும் வானிலை மையம் தெரிவித் துள்ளது.
3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம்
சென்னை,ஜன.13- ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்றாத 3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடன்கள் மற்றும் முன்பணம், சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டி உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக தனலட்சுமி வங்கி, பஞ்சாப் சிந்து வங்கிக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. தனலட்சுமி வங்கிக்கு ரூ.1.20 கோடி பஞ்சாப் சிந்து வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் வாடிக்கையாளர்கள் சேவை கள் முறையாக பின்பற்றாததால் இஎஸ்ஏஎஃப் சிறு நிதி வங்கிக்கு ரூ.29.55 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடத்தை விதிமுறைகளை மீறிய தற்காக மட்டுமே மேற்கூறப்பட்டுள்ள வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டதாகவும் அவை வாடிக்கை யாளர்களுடன் ஈடுபட்டுள்ள பணப் பரிவர்த்தனைகளை பாதிக்கும் நோக்கில் விதிக்கப்படவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.