tamilnadu

img

பள்ளிகள் திறப்பு: அமைச்சர் ஆலோசனை...

சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக் கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும்,பள்ளி, கல்லூரி பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப் படும் என்றும் தெரிவித்தார்.மேலும் அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல் பட அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க இரண்டு வார காலம் அவகாசம் உள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் செங்கோட்டையன் திங்களன்று (நவ.2) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.பள்ளிகளை திறக்கும்போது எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.வகுப்பறைகளில் கிருமிநாசினியை தெளித்து சுத்தப்படுத்துதல், மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல் கள் கூறுகின்றன.