தருமபுரி. மார்ச் 6- தருமபுரி அருகே சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் புதியதாக கட்டப்பட்ட குழந்தைகள் இல்லத்தை வெள்ளியன்று தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட பஞ்சப்பள்ளியில் சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில் ரூ.3.65 கோடி மதிப்பில் அரசினர் குழந்தைகள் இல்லக் கட்டிடத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சியின் மூலமாக திறந்து வைத்தார். இதையொட்டி, தருமபுரியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங் கினார். இக்கட்டிடம் தரைத்தளத்தில் வர வேற்பு அறை, கண்காணிப்பாளர் அறை, அலுவலகம், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அறை, சமையல் அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறை உள்ளிட்ட 10 அறைகள் 681 சதுர மீட்டரில் அமைந் துள்ளது. முதல் தளத்தில் பல்நோக்கு பயன் பாட்டு அறை, உதவி கண்காணிப்பாளர் அறை, மருத்துவமனை, மாணவர்கள் அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறை உள்ளிட்ட 8 அறைகள் 681 சதுர மீட்டர் என மொத்தம் 1,362 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக, இவ்விழாவில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா சரவணன், முன்னாள் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.அரங்கநாதன், ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபால், சமூக பாதுகாப்புத் துறை நலக்குழுத்தலைவர் சரவணன், வட்டாட்சியர் ராஜா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.