சென்னை, ஆக. 3- ஆன் லைன் வகுப்புக்கள் நடத்த விதிமுறைகள் வகுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்றும் என எதிர்பார்ப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது கொரோனா ஊரடங்கு காரண மாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத் தப்படுவதாகவும், இணையதளங்க ளில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக் கும் வரை, ஆன் லைன் வகுப்புக்க ளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும், ஆன் லைன் வகுப்பு களுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றை பார்த்துக் கொண்டி ருப்பதால் மாணவர்களின் கண்க ளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ஆன் லைன் வகுப்புகளுக்கு கட்டுப் பாடுகள் விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்த ரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசார ணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில் ஆன் லைன் வகுப்புக்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு விதிமுறைகள் வகுக்க உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், விசாரணையை தள்ளிவைத்தி ருந்தது. இந்த வழக்குகள் மீண்டும் திங்கட் கிழமை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிமுறைகள் வெளி யிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, மழலையர் வகுப்பு களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங் கள் மட்டுமே இருக்க வேண்டும். நாளொன்றுக்கு , ஒரு ஆசிரியர், ஆறு வகுப்புகளும், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளும் எடுக்க வேண்டும்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த வேண் டும். எல்கேஜி, யுகேஜி வகுப்பு களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 30 முதல் 45 நிமிடங் கள் 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப் பட வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரை , 30 முதல் 45 நிமிடங்களுக்கு 4 பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் வகுப்புக ளுக்கு குழந்தைகளை கட்டாயப்ப டுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வெறும் பரிந்துரை அடிப்படையில் இருப்பதாகவும், இதை அமல்படுத்த முடியாது எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசாணையை முழுமையாக படிக்காமல், எதிர்ப்பு தெரிவிப்ப தாகவும், மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் அரசாணை யில் இடம் பெற்றுள்ளதாகவும் தமி ழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இந்த வழக்கில் தங்களை யும் இணைக்கக் கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மாண வர்களின் நலன் சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஆன் லைன் வகுப்பு கள் அனைத்து தரப்பு மாணவர்க ளும் பெறும் வகையில் ஒரே மாதிரி யான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதால், இந்த வழக்கில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றே?ர் சங்கங்களுக்கும் தகவல் தெரி விக்கும் வகையில், ஆங்கிலம், தமிழ் பத்திரிகையில் இந்த வழக்கு விசா ரணை ஆகஸ்ட் 19ம் தேதி விசார ணைக்கு வருகிறது என தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசார ணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், ஆன் லைன் வகுப்புக் கள் நடத்துவது தொடர்பாக தமி ழக அரசு பிறப்பித்துள்ள அரசா ணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி கள் உத்தரவிட்டனர்.