tamilnadu

img

ஓணம் பண்டிகை: முதல்வர்- தலைவர்கள் வாழ்த்து

சென்னை:
ஓணம் பண்டிகையை யொட்டி தமிழக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,” இந்த பண்டிகை நம்மிடையே உள்ள வேறுபாடுகளை களைந்து, முன்னேற்றத்துக்காக வழி வகுக்கட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஒற்றுமையையும் நல் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வரட்டும்” என குறிப்பிட்டுள்ளார் ‌

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,” சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மலையாள மக்களால் சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் இத்திருவோணத் திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்” என்று  தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “கேரளப் பெருமக்களின் பண்பாட்டுடனும், உணர்வுகளோடும் ஒன்றிப்போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.ஒணம் பண்டிகையையொட்டி மலையாள மக்களுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

;