தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டத்தில் டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த பெருமழை காரணமாக கட்டுக்கடங்காத வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், எஸ்.பழனி, ராமநாதன், பிச்சைராஜன், கே.ஆர்.முத்துசாமி, எஸ்.ராஜாமணி, ஜெயபாண்டி, கிருத்துவராஜ், சண்முகசுந்தரம், முத்துசாமி, மாசிலாமணி, ஜெயராமன், கிருஷ்ணன், ராமசந்திரன், அம்பலவாணன், சாமியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.