ராணிப்பேட்டை, ஜூலை 13 - நீட் தேர்வை ஒழிக்க, சமூக நீதி காப்போம் என்ற முழக்கத்தோடு தமிழ்நாட்டின் ஐந்து முனைகளிலிருந்து திராவிட கழகம் சார்பில் ஜூலை 11 அன்று இரு சக்கர வாகன பிரச்சாரம் புறப்பட்டுள்ளது. ஜூலை 15 இல் சேலத்தில் முடித்து அங்கு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட பிரச்சார பயண குழுவினர் ராணிப்பேட்டை வந்தடைந்தனர். அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.