ஓஎம்ஆர் புத்தகத் திருவிழா தொடங்கியது ஏப் 27ந் தேதி வரை நடைபெறுகிறது
சென்னை, ஏப். 19 - 5வது ஓஎம்ஆர் புத்தகக் காட்சி வெள்ளியன்று (ஏப்.18) பெருங்குடி சுங்கச் சாவடி அருகே உள்ள வள்ள லார் சன்மார்க்க அரங்கில் தொடங்கியது. இந்த புத்தகக் காட்சி ஏப் 27 வரை நடை பெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தகக்காட்சி செயல்படும். இங்கு வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10 விழுக் காடு கழிவு வழங்கப்படு கிறது. இந்த புத்தகக் காட்சியை தொடங்கி வைத்துப் உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தின் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் பேசுகை யில், அச்சுக்கலை தோன்றி முதல் 300 ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ஆசிய மொழி களில் 40 விழுக்காடு தமிழ் நூல்கள்தான். இந்தியாவில் முதன்முதலில் பொது நூலகச் சட்டம் தமிழகத் தில்தான் 1948ல் கொண்டு வரப்பட்டது. இந்தியா விலேயே தமிழகத்தில் மட்டும்தான் மாவட்டம், வட்டாரம் என 4ஆயிரத்திற்கு மேற்பட்ட நூலகங்கள் செயல்படுகின்றன. தமிழ கத்தின் அறிவு வெடிப்புக்கு, அறிவுப் புலமைக்கு நூல கங்கள்தான் காரணம்” என்றார். “தமிழகத்தில் மட்டும் தான் மாநிலம், மாவட்டம், வட்டாரம், பகுதியளவில் புத்தகக் காட்சி நடை பெறுகிறது. பூமி நாம் வாழ வந்த இடம் மட்டுமல்ல, வாசிக்கும் இடம். பிற மொழிகளில் வெளியாகும் நூல்கள் எவ்வளவு வேக மாக தாய் மொழியில் பதிப் பிக்கப்படுகிறதோ அதை பொறுத்தே அந்த சமூ கத்தின் வளர்ச்சி இருக்கும். தமிழில் ஏராளமான பிற மொழி நூல்கள் அச்சிடப்படு வது மகிழ்ச்சி அளிக்கிறது “ என்றும் அவர் கூறினார். “அச்சிடப்பட்ட புத்த கங்களை படிப்பது தனி ரசனைதான். பணம் இல்லை என்பதால் படிக்காமல் விட்டு விடக் கூடாது என்பதால் ரோஜா முத்தையா நூல கத்தில் நூல்களை பிடிஎப் வடிவில் மாற்றி மின்நூலக மாக மாற்றியுள்ளோம். ரோஜா முத்தையா நூல கத்தில் 5 லட்சம் தமிழ் ஆவ ணங்கள் உள்ளன. அவற்றை கொண்டு தமிழ் அறிவு வளாகம் ஏற்படுத்த ப்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு அறிவி யல் இயக்க நிர்வாகி க.மலர்விழி, “புறநகர்ப் பகுதியின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் வாசிப்பு தேடலை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது” என்றார். மலையாளத்தில் விமலா மெனன் எழுதி, தமிழில் அம்பிகா நடராஜன் மொழி பெயர்ப்பில் ‘புக்ஸ் பார் சில்ரன்’ பதிப்பித்துள்ள “நாங்களும் மனிதர்கள் தானே!” எனும் நூலை சத்தியபாரதி வெளியிட, திவ்யா பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அரசு பள்ளி ஆசிரியர் என்.துரை விற்பனையை தொடங்கி வைக்க சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் பேர மைப்பு நிர்வாகிகள் எஸ்.கோமதி நாயகம் பெற்றுக் கொண்டார். பாரதி புத்தகா லயம் க.நாகராஜன், ரவிச் சந்திரன், குடியிருப்போர் சங்க பேரமைப்பு நிர்வாகி வி.பார்த்திபன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். முனை வர் ஸ்ருதி நிகழ்வை ஒருங்கி ணைத்தார்.