கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டுள்ளது. பொதுமுடக்கம் உள்ள பகுதிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் கட்டமாக ஆயிரம் ரூபாய்
நிவாரணம் வழங்குவதாகவும், இந்தத் தொகையை ரேசன் கடை ஊழியர்கள் வீடுவீடாக வந்து வழங்குவார்கள் என்றும் அரசு அறிவித்து. இதற்கு மாறாக பொதுமக்களை ரேசன் கடைக்கு வரவழைத்து நீண்ட வரிசையில் நிறுத்தியே ஊழியர்கள் நிவாரணத் தொகையை வழங்குகின்றனர். இடம்: மண்டபம்சாலை, அண்ணாநகர்