சென்னை:
இம்மாதம் 31ஆம் தேதி வரை சென்னை மெரினாவுக்கு பொதுமக்கள் வர அனுமதியில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பல கட்டங்களாக பல்வேறு வகையான தளர்வுகளுடன் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திரையரங்குகள் மற்றும் மெரினா கடற்கரை உள்ளிட்ட சில இடங்கள்மக்களின் பயன்பாட்டுக்கு வராமல்உள்ளன.
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள சென்னை மாநகராட்சி, “பொதுமுடக்கம் தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை” என்று தெரிவித்துள்ளது.மேலும், மெரினாவில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் திறப்பு நவம்பர் 9 ஆம் தேதி திறக்கப்படுகிறது என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது. டெண்டர் திறப்புகுறித்து நவம்பர் 11ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.