சத்துணவு ஓய்வூதியர்கள் மனு அனுப்பும் போராட்டம்
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 ஆக உயர்த்தி யும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டியும் தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு சத்து ணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனுக் கள் அனுப்பும் போராட்டம் புத னன்று நடைபெற்றது. திமுக தேர்தல் வாக்குறுதியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்க ளாக்கி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் இந்த மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்கள் மற்றும் மாநகரங் களில் இருந்து திரளான சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் கள் இந்த மனு அனுப்பும் போராட் டத்தில் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் மாநி லத் தலைவர் கே.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோ பால், மாவட்டப் பொருளாளர் எஸ். சாரதாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.