tamilnadu

img

வடசென்னை மே தின பேரணி

வடசென்னை மே தின பேரணி

139ஆவது மே தினத்தையொட்டி சிஐடியு - ஏஐடியுசி வடசென்னை மாவட்ட குழுக்கள் சார்பில் மிண்ட் பாரத் திரையரங்கம் அருகில் இருந்து தொழிலாளர்களின் பேரணி நடைபெற்றது. இதில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், இ.அருணாச்சலம் (ஏஐடியுசி), ஆர்.ஜெயராமன், வி.குப்புசாமி, ஆர்.லோகநாதன், ஆர்.மணிமேகலை, வி.ஜெயகோபால் (சிஐடியு), எம்.எஸ்.மூர்த்தி, எஸ்.குப்பன், ஏ.அருள், வி.பெருமாள்சாமி, ஜி.ரேணுகாதேவி (ஏஐடியுசி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அர்ஜென்டினாவில் நிலநடுக்கம்

மெக்சிகோ,மே 2- தென் அமெரிக்க  நாடான அர்ஜென்டினா அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி யுள்ளது. நிலநடுக்கத்தின் எதி ரொலியால், சிலியின் மாகல்லனேஸின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. மேலும், அர்ஜென்டினா வில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்ப தால் பேரலைகள் எழுந்தி ருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.