tamilnadu

img

துணை வேந்தர்கள் இல்லை; பேராசிரியர்கள் இல்லை; நிதி இல்லை நெருக்கடியில் தமிழகப் பல்கலைக்கழகங்கள்

சென்னை, ஆக.7- தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்யவிடாமல், ஆளுநர் செய்யும் அழிச்சாட்டியங்கள்,தேர்வு முடிவு களில் குளறுபடிகள், யுஜிசி நிதி வெட்டு, மாநில உயர்கல்வித்துறை யின் நிதி தணிக்கை, நிரப்பப்படாத பேராசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளால், உயர்கல்வி மையங்களான பல் கலைக்கழகங்கள் முற்றுகையிடப் பட்டுள்ளன.

மறுக்கும் ஆளுநர்    

சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர் பணியிடம் நீண்ட காலமாக நிரப்பப் படாமல் உள்ளது. துணைவேந்தர் நியமனத்திற்கான மூன்று நபர் தேடுதல் குழுவை மாற்றி யுஜிசி (UGC) தலைவரால் பரிந்துரைக்கப் படும் நான்காவது நபரை இணைப் பது குறித்து தமிழ்நாடு அரசிடம்  ஆலோசிக்காமல் தான்தோன்றித் தனமாக அறிவிப்பை ஆளுநர் வெளி யிட்டார். பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்த அறி விப்பு திரும்பப்பெறப்பட்டது. ஆனால் பல மாதங்களைக் கடந்தும் இந்த மூன்று பல்கலைக்கழகங்களுக் கான துணைவேந்தர்களை நிய மிக்கும் பணியை ஆளுநர் செய்ய  மறுக்கிறார். இதனால் பல்கலைக் கழகத்தின் அன்றாடப் பணிகள் பாதிக் கப்பட்டுள்ளன. மாணவர்களால் சான்றிதழ், ஆராய்ச்சி மாணவர் களால் பட்டயச் சான்றிதழ் உள்ளிட்ட வை பெற முடியாத சூழல்உள்ளது.

தேர்வு முடிவுகளில் குளறுபடி 

அண்ணாமலை பல்கலைக்கழ கம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் மதிப் பெண் குறிப்பிடாமலும் மற்றும் ஒற்றை இலக்க மதிப்பெண் என்ற  முறையில் தேர்வு முடிவுகள் வெளி யாகியுள்ளன.  பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தால் தேர்வு முடிவுகளில் இவ்வளவு குளறுபடிகள் நடந்துள்ளன. இதனால் மாணவர்கள் முதுநிலை படிப்பை தொடர முடியாமல் பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்படுகிறது.

நிதியை வெட்டிய யுஜிசி 

தமிழ்நாடு அரசின் மாநில பல்கலைக்கழகங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கடும் நிதிச் சிக்கலில் சிக்கித் தவித்து வருகின்றன. யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு நிதி  ஒதுக்குவதை முற்றிலுமாக நிறுத்தி  வைத்துள்ளது. அதோடு மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங் களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதியினை வெட்டியிருக்கிறது. தமிழ்நாடு அரசிடமிருந்து 50சதவீதத் துக்கும் குறைவான நிதி பெற்றால் அது தனியார் பல்கலைக்கழக வரை முறைக்குள் வருகிறது. மாநில அரசின் உயர்கல்வித்துறையும் தன் பங்குக்கு நிதி தணிக்கை மற்றும் பல காரணங்களைக் குறிப்பிட்டு பல் கலைக்கழகங்களுக்கு வழங்கும் நிதியினை நிறுத்தியுள்ளது. இத னால் பல்கலைக்கழகங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை காமராசர் பல் கலைக்கழகம், சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல உயர்கல்வி நிறுவனங்கள் அதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கூட வழங்க இயலாமல் உள்ளன.  

மாணவர்கள் மீது சுமை

இந்த நிதிச் சிக்கலை காரணம் காட்டி பல்கலைக்கழக நிர்வாகங் கள் கட்டண உயர்வின் மூலம் மாண வர்கள் மீது சுமையை ஏற்றி வரு கின்றன. தேர்வுக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் மற்றும் ஆராய்ச்சி மாணவர் களுக்கான கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி இருக்கின்றன. குறிப்பாக மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகத்தில்  ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நீட்டிப்புக் காலத்திற்கான கட்டணத்தை ரூ.50,000 என்ற அள வில் கடுமையாக உயர்த்தி உள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் முடங்குவது என்பது பொதுக் கல்விக்கு குந்தகம் விளை விக்கும் செயலாகும்.

ஊழல் துணைவேந்தர்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பல்வேறு சர்ச்சைகளிலும் ஊழல் வழக்குகளிலும் சிக்கியுள்ளார். மேலும் தனது பதவிக்காலம் முடி வடைந்தும் ஆளுநரின் உதவி யோடு, தற்போது வரை துணை வேந்தராகவே நீடித்து வருகிறார். இதன் காரணமாக இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை விகிதம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

அண்ணா பல்கலை.யில் முறைகேடுகள் 

 2023-24 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளின் தகுதி யற்ற 480 பொறியியல் கல்லூரி களுக்கு  அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழு அங்கீகாரம் வழங்கி யுள்ளது. கல்லூரிகளில் பணியாற்றக் கூடிய 353 பேராசிரியர்கள், ஒரே நேரத்தில் ஒருவரே ஐந்து முதல் 11 கல்லூரிகள் வரை முழுநேர பேரா சிரியர்களாக பணியாற்றிக் கொண்டி ருப்பதாக பதிவு செய்து மோசடி - அதாவது 353 பேராசிரியர்கள் 972  இடங்களில் பணியாற்றியது போல் முறைகேடு நடந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

பேராசிரியர்கள் இல்லை

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வருகின்றன. 1999-க்கு  பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலமாக பணியிடங்கள் நிரப்பு வது என்பது நடைபெறவில்லை. கடந்த காலங்களில் பலமுறை அதற்கான அறிவிப்பினை வெளி யிட்டும் தள்ளிப்போகும் சூழல் நிலவி வருகிறது. செட் (SET) தகுதி தேர்வும் 8 வருடங்களாக நடத்தப் படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள், பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன.

 இதனால் மாணவர்களின் உயர்கல்வியும், பல்கலைக்கழ கங்களில் மாணவர் சேர்க்கையும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

மாணவர்களின் கோரிக்கை

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மாணவர், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் களின் நலனை கருத்தில் கொண்டும், மாநில அரசுப் பல்கலைக்கழகங் களை பாதுகாக்கும் நோக்குடனும் தமிழக அரசும் உயர் கல்வித்  துறையும் செயல்பட வேண்டு மென்ற கோரிக்கை மாணவர்களி டையே வலுத்து வருகிறது. இப்பிரச் சனைகளுக்குத் தீர்வு கோரி  ஆகஸ்ட் 13அன்று பல்கலைக்கழக வளாகங்கள் முன்பு போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தவிபரங்களை, இந்திய மாணவர் சங்க மாநிலத்தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநிலச்செய லாளர் கோ. அரவிந்தசாமி ஆகி யோர் தெரிவித்துள்ளனர்.