tamilnadu

img

எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் : ஆளுநருக்கு கனிமொழி எம்.பி., பதிலடி

சென்னை, செப்.4- தமிழ்நாட்டின் ஆளுநர்  ஆர்.என்.ரவி,  “தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது” என பேசினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் என ஆளுநருக்கு கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,“மாநில பாடத்தை ஆளுநர் படித்தாரா என்று தெரியாது. நாங்கள் எல்லோரும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான். உலகம் முழுவதும் தலைசிறந்த மருத்துவர்கள், பொறியா ளர்கள் எல்லோரும் மாநில பாடத்திட்டத்தில் படித்த வர்கள்தான். இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநில மாக தமிழ்நாடு உள்ளது. எங்களுக்கு யாரும் பாடம்  எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்துள்ளார்.