tamilnadu

தலைமைச் செயலகத்தில் இனி அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி: அரசு கட்டுப்பாடு.....

சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி அளிக்கப்படும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொடரின் இரண்டாம் அலை அதிதீவிரமாக தாக்கி வருவதால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  நோய்த்தொற்றை தடுக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஊழியர்களுக்கு வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

;