தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வியாண்டில், 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டில், 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்த நிலையில், தற்போது, 433 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளான. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த கல்வியாண்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.