தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் 20ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய பணிகள், மருத்துவம், ஊடகம் மாதிரியான துறையினருக்கும் இந்த ஊரடங்கு பொருந்தாது என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.