tamilnadu

தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும்

மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 3- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவு  அளித்துவரும் தன்னார்வலர்கள் மற்றும்  தொண்டு நிறுவனங்கள் தங்கள் விவரங்களை  மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யுமாறு ஆணை யர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத் துறை யின் கீழ் இயங்கும் கால்நடை மருத்துவப்  பிரிவில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள், தெரு நாய்களுக்கு குடியிருப்பு பகுதிகளிலும், பொது இடங்களிலும் உணவு  அளித்து வரும் தன்னார்வலர்கள், தொண்டு  நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிட மிருந்து பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கும், தன்னார்வலர்க ளுக்கும் இடையே இதுகுறித்து எழும் முரண்பாடுகளை குறைப்பதற்காகவும், மேலும் இத்தகைய நாய்களின் வாழ்வியல் நிலையை மேம்படுத்தவும், மேற்கண்ட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறு வனங்களின் ஒத்துழைப்பை நாட இந்திய  விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுத லின்படி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், தோல் நோயினால் பாதிக்கப்பட்ட நலிவுற்ற தெருநாய்களையும், இனக்கட்டுப் பாடு அறுவை சிகிச்சை செய்யப்படாத நாய்களையும் அடையாளம் காண்பதற்கும், தெருநாய்களை தத்தெடுக்கும் இயக்கத்தை  ஊக்குவிப்பதற்கும், மேற்கண்ட தன்னார்வ லர்கள், தொண்டு நிறுவனங்களின் சேவை பயன்படுத்தி கொள்ளப்படும். இந்திய விலங்குகள் நல வாரியத்தின்  வழிகாட்டுதலை பின்பற்றி முன்னெடுக்கப் படவுள்ள இந்த திட்டத்தில் தெருநாய்களுக்கு உணவு அளித்து வரும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பங்குபெறுவதற்கு ஏதுவாக அவர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை vetsec59@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ஜனவரி 15ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், “வெறிநாய்க்கடி நோய் இல்லா  மாநகரம்” என்ற இலக்கினை பெருநகர சென்னை மாநகராட்சி அடைய தீர்மா னிக்கப்பட்டு, பொது சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப் பிரிவின் சார்பாக வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் திட்டம் மண்டல வாரியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது. மண்டலங்களில் மண்டல  அலுவலர், மண்டல நல அலுவலர், கால்நடை  உதவி மருத்துவர் ஆகியோரின் மேற்பார்வை யில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்க ளில் மொத்தம் 62,266 நாய்களுக்கு வெறி  நாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற  ஒட்டுண்ணி நீக்கும் ஊசி போடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தும் பொழுது பொது மக்கள் தாமாக முன்வந்து தாங்கள் வளர்க்கும்  3,221 செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டு பயணடைந்துள்ளனர். மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது பொது மக்களிடம் வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;