தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் தாயகம் கவி எழுப்பிய கேள்விக்கு, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலளித்து பேசியதாவது:
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பத்திரிகையாளர்களுடன் பொது மக்களை மாதந்தோறும் நேரில் சென்று சந்தித்து,
அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்களிடம், அதன் பயன்கள் பற்றிய விவரங்கள் அறிந்து வருகிறார்கள். இந்நிகழ்விற்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் “நிறைந்த மனம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்த தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டில், அங்கீகார அட்டை பெற்றுள்ள பத்திரிகையாளர்களுக்கு அரசுப் போக்கு வரத்து கழக பேருந்துகளில் தலைமையிட பத்திரிகை யாளர்கள் பயணம் செய்திட 457 நபர்களுக்கும், பிற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி யரின் பரிந்துரையின் பேரில் 2,917 பேருக்கும் என மொத்தம் 3,374 கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் அட்டை பெற்றுள்ள பருவ இதழ்கள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.