ஆன்லைன் சூதாட்டம் - தற்கொலை
சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார், ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடி தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்வி கட்டணம்
அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளன. மேலும் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் தலா 15% கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்யவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தேர்தலுக்குத் தயார்
குடியாத்தம் இடைத்தேர்தல் நடைபெற்றால் வாக்கு பதிவிற்கு தேவையான இயந்திரங்களை தயார் செய்யும் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
முழு பொதுமுடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வருவாய்த்துறை அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து உத்தனப்பள்ளி கிராமத்தில் தொடர் முழு பொதுமுடக்கம், மறு உத்தரவு வரும்வரை தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பரிசோதனைகளை அதிகப்படுத்துக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் அறிவுறுத்தினார்.
சிறையிலடைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஃபேஸ்புக் பழக்கத்தால் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இலியாஸ், பர்கத், சூர்யா ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொரோனா தொற்றால் உயிரிழப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்பத்தூர் நகரக் குழு உறுப்பினர் பெரியண்ணன் கொரோனா தொற்று பாதிப்பால் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.