tamilnadu

புதுவையில் தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட்டை அனுமதிச் சீட்டாக பயன்படுத்தலாம்

புதுச்சேரி, ஜூன் 11- எய்ம்ஸ் தேர்வு எழுத வரு பவர்கள் ஹால் டிக்கெட்டையே அனுமதிச் சீட்டாக பயன்படுத்தலாம் என்று புதுவை ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் கூறியிருப்பதா வது: கொரோனா தொற்றை தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வருகின்ற 14, 21, 22, 26  ஆகிய தேதிகளில் போஸ்ட் கிராஜுவட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேசன் ரிசர்ச் தேர்வு நடைபெற உள்ளது. புதுச்சேரியை தேர்வு மையமாக தேர்ந்தெ டுத்துள்ள பிற மாவட்ட மற் றும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை புதுச்  சேரி எல்லையை கடப்பதற்  கான அனுமதி சீட்டாக  பயன்படுத்திக் கொள்ள லாம். காவல்துறையினரும், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் தேர்வு எழுத வருபவர்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.