சென்னை, மே 10-வர்ணமாலா என்ற பெயரில் ஒரு மாபெரும் புதிய திருமண அனுபவ மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழ்களில் தொடங்கி, நிழற்பட கலைஞர்கள், வீடியோ கிராஃபர்கள், திருமண ஆடைகள்,அலங்காரங்கள், மணமகள் மற்றும் மணமகனுக்கான ஆபரணங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் என திருமணம் தொடர்பான அனைத்து விஷயங் களையும் நியாமான கட்டணத்தில் வர்ணமாலா செய்து தரும் என்று திறப்புவிழாவில் பேசிய நிறுவனத்தின் தலைமை அலுவலர் நிரஞ்சனா வி மனோஜ் கூறினார்.உங்கள் திருமணத்தை ஆனந்தமயமான ஒரு அனுபவமாக ஆக்குவதற்கு உங்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்து விஷயங்களையும் வர்ணமாலா கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார். திரைப்பட துறையின் முன்னணி பிரபலங்களான வெங்கட் பிரபு, வைபவ், மஹத், ரித்விகா மற்றும் விஜே ரக்ஸன் ஆகியோர் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.