தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தின் புதிய உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் கே. பொன்னுசாமி, புதிய அலுவல் சாரா உறுப்பினர்களான இரா. சரவணன் (தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்), வெ.மாறன் உள்ளிட்ட அனைவரும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, இயக்குநர் எஸ். அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.