சென்னை, அக்.31- சென்னை பல்லாவரத்தில் சர்வதேச கேபிடல் ரேடியல் தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று (அக்.31) திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் புதிய ஒரு தொழில் புரட்சி நடந்து கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக ஏரா ளமான நிறுவனங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நாட்டில் வந்து கொண்டிருக்கிறது முதல் கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி அளவில் துவக்கப்பட தயார் நிலையில் உள்ளது. இரண்டாம் கட்ட கேபிடல் ரேடி யல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்குவதற் கான தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
தொழில் துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு உயர் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் பெருமளவில் இயக்குவதற்காக திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம் புத்தகதொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் துறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக் கிறது. 2030 ஆம் ஆண்டு ஒரு டிரில்லியன் டாலர் பொருளா தாரத்தை ஈட்டுவோம் என்ற இலக்கை அடையும் நாள் வெகு தூரம் இல்லை.
உயர் கல்வி கற்கும் மாணவர் கள் மற்ற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த வளர்ச்சி களை மேம்படுத்த அவர்கள் துறையில் முதன்மையாக சிறக்க செய்வதன் வெற்றிதான் நான் முதல்வன் திட்டத்தின் குறிக்கோள்.
உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர உள்ள னர். பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப் படுத்தியிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கள் தா.மோ.அன்பரசன் , டி.ஆர்.பி.ராஜா, துறையின் செயலாளர் அருண்ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் பேசினார்.