சென்னை:
தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கருத்து தெரிவிக்க கோரி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புபயனற்றது என்றும் புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய கல்வி கொள்கை குறித்து ஆகஸ்ட் 31க்குள் ஆசிரியர்கள், பள்ளிமுதல்வர்கள் இணையதளம் வாயிலாக கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரியுள்ளது. இது ஜனநாயக நெறிமுறை களுக்கு எதிரானது. மாநில அரசின் கருத்துக்களை கூட எதிர்பார்க்காமல், நேரடியாக ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. எனவே இதுதொடர்பாக தமிழக அரசு தனது நிலையை தெரிவிக்க வேண்டும்.தேசிய கல்வி கொள்கை குறித்து இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உள்ளது. பலமொழிகள் பேசக்கூடிய நாட்டில், அவரவர் தாய்மொழியில்தான் நன்கு புரிந்து கருத்து தெரிவிக்க முடியும். எனவே, இரு மொழிகளில் மட்டும் கருத்து கேட்பது எவ்விதத்தில் பயன் தராது.
இந்த கருத்துக்கேட்பு எந்தப் பயனையும் தராது. தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். அரசியல் கட்சிகள், கல்வியா ளர்கள் உட்பட அமைப்புகள் தெரிவித்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை உள்ளடக்கிய தேசிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.