tamilnadu

உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி 

 சென்னை,அக்.17- பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக் கப்பட்டுள்ளது.  ஆளும்கட்சியின் நிர்ப்பந்தத்தால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமனி மேகா லயா மாநில உயர்நீதி மன்றத்திற்கு திடீரென்று இட மாற்றம் செய்யப்பட்டார்.இதனையடுத்து தஹில் ரமனி ராஜினாமா செய்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப் பை வினீத் கோத்தாரி வகித்து வந்தார். இந்நிலையில் பீகார் மாநிலத்தின் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யாக பணியாற்றி வரும் ஏ.பி. சாஹியை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு பணியிடமாற் றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் பாட்னா உயர்நீதிமன்றத்து க்கும், மேகாலயா உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி ஏ.கே. மிட்டல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்து க்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

;